ஞாயிறு, 2 நவம்பர், 2008

என் இரண்டாவது ரதி - ராஜாமணி

என் இரண்டாவது ரதி - ராஜாமணி. என் வகுப்புத் தோழனின் முறைப்பெண். அவன் அவளை டாவடிக்க அவனுடன் நானும் செல்வது வழக்கம். அவன் அவளை சீண்டி விளையாடும் போது நானும் சேர்ந்து கொள்ள ஆரம்பித்து, பின்னர் அவன் வயல் வேலையாகவோ அல்லது வீட்டு வேலையாகவோ அவன் பிஸியாகும் போது நான் மட்டும் தனியாக கடலை போட வேண்டியிருக்கும். பின்னர் அவளை நான் மட்டும் ஏகபோகமாக உரிமை கொண்டாட சாணக்கியத்தனம் பயில வேண்டிய நிர்ப்பந்தம். அதன் பொருட்டு பொய் பயில ஆரம்பித்ததும் இந்த காலகட்டம் தான்.
ராஜாமணியை கவர வேண்டி ஆசையுடன் திண்பன்டங்களையும் வறண்ட ஆற்றில் பொறுக்கியெடுத்த அழகான அஞ்சாங்கல்லையும் கொடுக்க ஆரம்பித்து பொன்வண்டுக்காக கண்ட குப்பைமேட்டையும் அலைந்து திரிந்ததும் உண்டு.

4 கருத்துகள்:

  1. வாங்கிய உதைகளையும் ஒப்புக்கொள்ளவேண்டுமய்யா

    பதிலளிநீக்கு
  2. //வாங்கிய உதைகளையும் ஒப்புக்கொள்ளவேண்டுமய்யா//

    நன்றி வருங்கால முதல்வரே. அந்த காலகட்டத்தில் உதையெல்லாம் கிடையாது. ஆனால் சக தோழர்கள் ஆட்காட்டியாக மாறும்போது, ஊர்ல வேற பொன்னா இல்ல. இங்க "கா" உட்டுட்டு, வேற எடத்துல (பூவை பொறுக்கி) "பழமாக்க" வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  3. முகப்பு மொழிக்கும், பேருக்கும் தகுந்த விசயங்க இப்பத்தான் மெதுவா வர ஆரம்பிச்சிருக்கு... வரட்டும், வரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
    வெறுமனே குமுதம், ஆனந்த விகடன் என்று தமிழை சுவாசித்து கொண்டிருந்த நான் கடந்த ஒரு மாத காலமாகத் தான் (தமிலிஷ்.காம் மூலமாக) பதிவுலகம் என்ற புதிய உலகம் அதுவும் தமிழில் இருக்க கண்டு, பேருவகை கொண்டு நித்தம் தோறும் பத்துக்கும் மேற்ப்பட்ட புதுப்புது பதிவு தளத்தை கண்டு கொண்டு (காய்ந்த மாடு கம்மங்கொல்லை பூந்த மாதிரி), திகட்ட திகட்ட விருந்துண்டு வ்ருகையில், அதுவே நான் வலைப்பூ தொடங்க முழுமுதற் காரணம். நெறய மேய்ந்து வருவதால், நான் எழுதுவது மலைப்பாகத்தான் உள்ளது.
    தொடருவேன்.
    தங்கள் பேராதவிற்க்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு